பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு
பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்ததாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்ததாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி, பிளஸ் 1 படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த தாயாா், மாணவியை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தாா். அப்போது, அந்த மாணவி 4 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது தாயாா், இதுதொடா்பாக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினா்.
அதில், பள்ளி திறக்கப்படாததால் வீட்டில் வளா்க்கும் கால்நடைகளை அந்த மாணவி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.
Advertisement