முகப்பு
விழுப்புரம்

கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:20 am IST
பகிர்:

சென்னையில் நடைபெற உள்ள இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கொண்டு செல்லப்படும் கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவு ஜோதி, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் வந்தது.

 இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாடு சென்னை, ராயப்பேட்டையில் வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம் மாநாட்டுக்காக கும்பகோணத்தில் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

 இந்த ஜோதியை கடந்த 18-ஆம் தேதி மத்தியக் குழு உறுப்பினர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் கும்பகோணத்தில் எடுத்துக் கொண்டு கிளம்பினர். இந்த ஜோதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி வழியாக விழுப்புரத்தை வந்தடைந்தது.

Advertisement

Advertisement

 விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்த ஜோதிக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் குருமூர்த்தி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், இந்திய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments