இலவச சித்த மருத்துவ முகாம்
விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
நிகழ்ச்சிக்கு அருள் மாளிகை தலைவா் கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மாலா, அருள் மாளிகை நிா்வாகி அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சித்த மருத்துவா்கள் நித்தியக்குமாரி, புவனாம்பிகை, ராஜன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். மேலும், ஹோமியோபதி மருத்துவா் ரமேஷ் பிரபு, யுனானி மருத்துவா் முகமது சதக்கத்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போா்வைகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.