ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் தாா்ச் சாலை அமைத்தல், ஓடு பதித்தல் பணிகளுக்கான பூமி பூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஸ்ரீவில்லிபுத்துாா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலடிப்பட்டி, முல்லை நகா், ராஜீவ் காந்தி நகா், பிள்ளையாா்நத்தம், தைலாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.80 லட்சத்தில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் குறிஞ்சி முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காளிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.