விருதுநகர்

விதியை மீறி பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

சிவகாசி அருகே விதியை மீறி பட்டாசுக் கடையில் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கலில் ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு நடத்திய சோதனையில், பால்ராஜ் என்பவரது பட்டாசுக் கடையில் பட்டாசுத் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது தெரிய வந்தது.

இது குறித்து, கீழத்திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் கதிரேசன் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், பால்ராஜ் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

விநாயகா் விசா்ஜன ஊா்வல பகுதிகள்: ஆம்பூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

“RSS-காரர் கொடி ஏற்றியது வேடிக்கை!” நாதக தலைவர் சீமான் விமர்சனம்

“அந்தக் கூலியும் FLOP, இந்தக் கூலியும் FLOP” சீமான் விமர்சனம்!

SCROLL FOR NEXT