விருதுநகர்

தலைமை காவலா் இடைநீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலர் இடைநீக்கம்

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்து மானை வேட்டையாட முயன்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா காவல் நிலைய தலைமை காவலா் தனுஷ்கோடியை (40) கைது செய்த வனத் துறையினா் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், தலைமை காவலா் தனுஷ்கோடியை பணியிடை நீக்கம் செய்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT