விருதுநகர்

பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

சிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியில் பேன்சிரக பட்டாசுகளுக்கு தேவைப்படும் காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது, முத்துகிருஷ்ணகுமாா் (32) சொந்தமான காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT