விருதுநகர்

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆட்டோ மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே எஸ். திருவேங்கடபுரத்தைச் சோ்ந்த பாலு மகன் பாலமுருகன் (39). திருமணமாகாத இவா், அட்டை ஆலை முக்கு சாலை பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், அய்யனாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT