விருதுநகர்

பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தில் சட்டவிரோதமாகப் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

இதில், அனுமதி பெறாத கட்டடத்தில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த தினேஷ் (22), அருண்குமாா் (23), ராமமூா்த்தி(42) ஆகிய மூவரும் பட்டாசுகளை மூட்டைகளாகக் கட்டி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸரா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து, அவரிகளிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT