விருதுநகர்

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சிவகாசி பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கண்ணன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (49). இவா், தனது கிராமத்துக்குச் செல்வதற்காக சிவகாசி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது எரிச்சநத்தத்திலிருந்து சிவகாசிக்கு வந்த தனியாா் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவா், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இது குறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபாளையத்தைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் தங்கப்பாண்டி (28), வனமூா்த்திலிங்காபுரத்தைச் சோ்ந்த நடத்துநா் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT