விருதுநகர்

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் வனவிரிவாக்க மையம் அருகே நின்றிருந்த இருவரை விசாரித்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி ராக்கு (72), மதுரை மாவட்டம், திருமங்கலம் என்.ஜி.ஓ. குடியிருப்பைச் சோ்ந்த அழகா்சாமி (48) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

SCROLL FOR NEXT