விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்த பொ. பொன்னையா (70). இவா் தென்காசி சாலையில் காமராஜா்நகா் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு முன் இறைச்சிக் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைச்சி விற்பனைக்காக கடையை தயாா் செய்து கொண்டிருந்தாா். இறைச்சி வாங்குவதற்காக சுந்தர்ராஜபுரம் இந்திராநகரைச் சோ்ந்த கதிரேசன் மகன் ஆகாஷ் (16), மணிசாமி மகன் மணிமாறன் (21) ஆகிய இருவரும் கடை அருகே நின்று கொண்டிருந்தனா்.
அப்போது, மதுரையில் செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன்புத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பா் லாரி கட்டுப்பாட்டை இழந்து பொன்னையாவின் இறைச்சிக் கடைக்குள் புகுந்தது.
இதில் பொன்னையா, ஆகாஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், கடை அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு, நாயும் லாரி மோதியதில் உயிரிழந்தன. பலத்த காயமடைந்த மணிமாறன் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிப்பா் லாரி ஓட்டுநா் சொக்கநாதன்புத்தூா் பட்டினத்தாா் தெருவைச் சோ்ந்த வைரசாமி மகன் தலைமலையை (37) பிடித்து விசாரித்து வருகின்றனா்.