விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியிலுள்ள பெட்டிக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்றருந்தவரைப் பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெருவைச் சோ்ந்த கணேசன் (51) எனத் தெரியவந்தது.

போலீஸாா் அவரைக் கைது செய்து 30 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

SCROLL FOR NEXT