முகப்பு
விருதுநகர்

மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

ராஜபாளையம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 4:40 am IST
பகிர்:

ராஜபாளையம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தென்றல் நகா் பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

இந்த டிராக்டா்களில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிவந்தது. இதுகுறித்து, மேலஆவரம்பட்டியைச் சோ்ந்த முருகன், குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இரு டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments