ஜோடியில்லாம எப்படி நடிக்கிறது...
காலஞ்சென்ற இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா "வயோலா' என்னும் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவர்.
காலஞ்சென்ற இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா "வயோலா' என்னும் இசைக் கருவியை வாசிப்பதிலும் வல்லவர்.
அதுமட்டுமல்ல, சிறந்த நகைச்சுவையுணர்ச்சி உள்ளவர்.
"பக்த பிரகலாதா' என்னும் படத்தில் நாரதராக நடித்த பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதுபற்றி கேட்டபோது-
""ஜோடியில்லாம நடிக்க சொல்றாங்க எப்படி நடிப்பது?'' என்று தமாஷாகப் பதிலளித்தார்.
கடந்த வருடம் கேரளத்தில் நடந்த ஒரு கச்சேரியில் ""எனக்கு இன்று உடல் நலமில்லை. அதனால் நான் எப்படிப் பாடினாலும் நீங்கள் பாராட்டித்தான் ஆக வேண்டும்'' என்று தமாஷாகப் பேசினார்.