முகப்பு
தினமணி கதிர்

வேறு இடம் பாருங்கள்!

அவர் பிரபலமான நகைச்சுவை எழுத்தாளர். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு வெளியூர் சென்று கோயில் ஒன்றில் படுக்கச் சென்றார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

அவர் பிரபலமான நகைச்சுவை எழுத்தாளர். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு வெளியூர் சென்று கோயில் ஒன்றில் படுக்கச் சென்றார். அப்போது அங்கே ஒரு துறவி அவரைத் தடுத்து, ""இது என் இடம், வேறு இடம் பாருங்கள்'' என்றார்.
பக்கத்தில் இருந்த மரத்தடியில் படுக்கப் போனார். அங்கே இருந்த துறவி, ""இது என் இடம், வேறு இடம் பாருங்கள்'' என்றார்.
எல்லாம் துறந்த துறவிகளுக்கே இப்படி இட ஆசை இருப்பதைப் பார்த்த அவர் மனம் மாறி, தாம் வேலை பார்த்த வாரப் பத்திரிகையில் மீண்டும் சென்று சேர்ந்தார்.
அந்த எழுத்தாளர் தான் சமீபத்தில் காலமான பாக்கியம் ராமசாமி எனும் புனைப்பெயரில் நகைச்சுவைத் தொகுப்பு எழுதிய ஜ.ரா.சுந்தரேசன்.

முழு கட்டுரையைப் படிக்க →