முகப்பு
தினமணி கதிர்

நூற்றாண்டை நோக்கி சி.எம்.சி.

வேலூர் சி.எம்.சி. (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகஸ்ட் மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2018 at 12:00 AM
பகிர்:

வேலூர் சி.எம்.சி. (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகஸ்ட் மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது.

வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வழியில் மருத்துவ உதவியின்றி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணியைப் பார்த்தபின், ஐடா ஸ்கேடர் என்ற அம்மையாரால் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.

மருத்துவமனை தொடங்கிய 1918}ஆம் ஆண்டு முதல் 1947}ஆம் ஆண்டு வரை பெண் மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். 1948}ஆம் ஆண்டிலிருந்துதான் ஆண் மருத்துவர்கள், அதுவும் ஐம்பது சதவீதம் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைத்ததும், நேர்முகத் தேர்வு வைத்ததும் இந்த மருத்துவமனை தான்.

Advertisement

மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.