சிரி சிரி
நகைக்கடையில் கொள்ளை அடிச்சி எப்படி மாட்டுனே..?
'நகைக்கடையில் கொள்ளை அடிச்சி எப்படி மாட்டுனே..?'
'எல்லாம் ஒரிஜினல் நகையான்னு செக் பண்றதுக்குள்ளே விடிஞ்சி போச்சு.. கடையைத் திறந்துட்டாங்க சார்..'
Advertisement
Advertisement
'நகைக்கடையில் ரூ.1.90 லட்சத்துக்கு நகைகளைக் கொள்ளையடிச்சது ஏன்டா..?'
'ரெண்டு லட்சத்துக்கு மேல் எடுத்தா பான் கார்டு வேணுமே சார்...'
-அ.ரியாஸ், சேலம்.
'உன் காதலி வீட்டிலேயே திருடினியாமே... ஏன்?'
'ஐயா.. எங்கே பணத்தை விட்டோமோ அங்கேதானே எடுக்க முடியுமே..'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
'ஏம்பா.. கொலையாளி எப்படி இருந்தான்னு சொல்ல முடியுமா?'
'கையில் கத்தியோடு இருந்தான் சார்...'
-அ.செந்தில்குமார், சூலூர்.
'நீ செஞ்ச குற்றத்துக்கு தண்டனை என்ன தெரியுமா?'
'நாலஞ்சு செக்ஷன் இருக்கு. எதை சொல்லட்டும் யுவர் ஆனர்..'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'நீங்களே முகமூடி போட்டுகிட்டு உங்க மனைவிகிட்டே பணத்தைத் திருடினீங்க?'
'என் மனைவிகிட்டே பணத்தை வாங்க வேறு வழி தெரியலைங்க ஐயா...'
'அந்த ஆளு ஐநூறு ரூபாய் கள்ள நோட்டு அடிச்சதுல எப்படி மாட்டுனாரு?'
'நோட்டுல காந்திக்கு கூலிங் கிளாஸ் போட்டுட்டாராம்...'
-வி.சாரதி டேச்சு, சென்னை.
'காட்டுக்குள்ளே இருக்கிற போலீஸ் அவுட் போஸ்ட்டிலா வேலை பார்க்கறீங்க? அடிக்கடி பாம்பு வரும்ல'
'அதெப்படி வரும். வந்தா பல்லை பிடுங்கிடுவோமுன்னு பயம் இருக்கும்ல அதுக்கு...'
-சம்பத்குமாரி, பொன்மலை.
'ஹலோ தொழிலதிபர் தண்டபாணியா? உங்க மனைவியை நாங்கதான் கடத்தி வச்சிருக்கோம்..?'
'ஹலோ நன்றி புரோ... பத்திரமா வைச்சிக்குங்கோ...'
'கட்டுன மனைவி உடம்புல பொட்டுத் தங்கம் கூட இல்லாம வெச்சிருக்கியே.. உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம்...'
'நல்லா நாக்கை பிடிங்குற மாதிரி கேளுங்கண்ணே...'
'உனக்கு அண்ணன்ஒருத்தன் இருக்கான்னு சொன்னியே.. இந்தத் திருடன்தானா அவன்...'
'அடிக்கடி திருடிட்டு வர்றீயே.. உனக்கு வெக்கமா இல்லை...'
'லம்பா ஒரு இடத்தில் திருடிட்டா செட்டில்
ஆகிடுவேன் எஜமான்...'
'ஆட்டோ டிரைவர் உங்களை மாமா, மாமான்னு கூப்பிடுறாரு.. நீங்க கண்டுக்காம இருக்கீங்க? போலீஸ்னா பயம் வேண்டாமா..'
'அவனோட தாய்மாமன்தான்...'
'சட்டைப் பையில் பிளேடு வெச்சிருங்கீங்களே ஏன்...'
'பஸ்ஸில் போகும்போது பிக்பாக்கெட் எவனாது கையைவிட்டா கிழிக்கட்டுமுன்னுதான்..'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.