முகப்பு
தினமணி கதிர்

ஜர்னி பிரேக்..!

இந்திய ரயில்வேயில் பலருக்கும் தெரியாத ஒரு வசதி- 'ஜர்னி பிரேக்'.

Updated On : 23 மார்ச் 2025, 12:06 am IST
பகிர்:

இந்திய ரயில்வேயில் பலருக்கும் தெரியாத ஒரு வசதி- 'ஜர்னி பிரேக்'.

ஒருவர் ஒரு ரயிலில் 500 கி.மீ.க்கு மேல் ஒரு பயணச் சீட்டில் பயணம் செய்தால், 501 கி.மீ.க்கு அப்பால் வழியில் உள்ள எந்த நிலையத்திலும் இறங்கி,

2 நாள்களுக்குள் எந்தக் கூடுதல் பணமும் தராமல் மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.

Advertisement

Advertisement

உதாரணத்துக்கு, ஒருவர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அலுவலக நிமித்தமாக ரயில் பயணச் சீட்டு பதிவு செய்துள்ளார். அதே நாளில் அவரை மேலதிகாரி புதுச்சேரி அலுவலகத்துக்குப் போகச் சொல்கிறார். அப்போது பயணி 536-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கி புதுச்சேரிக்குச் செல்லலாம்.

அடுத்த நாள் மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, பயணச் சீட்டில் பயணம் செய்யலாம். அதற்கு பயணம் செய்பவர் விழுப்புரம் ரயில்வே அலுவலரிடம் பயணச் சீட்டைக் காண்பித்து, 'ஜர்னி பிரேக்' என்று குறிப்பு வாங்க வேண்டும்.

ராஜ்தானி, சத்பதி, ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments