முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

'கல்யாணமானால் பொறுப்பு தானாக வந்துவிடும்...'

பகிர்:

'கல்யாணமானால் பொறுப்பு தானாக வந்துவிடும்...'

'உண்மைதான்... நான் இப்போதுதான் ரேஷன் கடையில பருப்பு வாங்கிட்டு வருகிறேன்.'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

Advertisement



'ஹலோ எப்ப வந்தா டாக்டரை ஆஸ்பத்திரியில பார்க்கலாம்?'

'எப்ப வந்தாலும் பார்க்கலாம்... டாக்டரே உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியிலதான் அட்மிட் ஆகியிருக்காரு!'

-தீபிகா சாரதி, சென்னை -5.



'என்னது... தாடி வச்சுக்காம அந்தப் படத்துல சாமியார் பாத்திரத்தில் நடிச்சியா?'

'ஆமாம், நான் நடிச்சது போலி சாமியார் ரோலில்தானே!'



'உங்களுக்குப் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது...'

'நீங்க எவ்வளவு பில்டப் கொடுத்தாலும், வழக்கமா குடுக்குற பத்து ரூபாய்க்கு மேல உங்களுக்குத் தரமாட்டேன், ஜோசியரே!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'அரை மணி நேரம் அவங்ககிட்ட என்ன பேசினே..?'

'சேதி எதுவும் இல்லைன்னு சொல்லி, சும்மா

பேசிக்கிட்டிருந்தேன்.'



'நீங்கதான் இந்தக் குடும்பத்தின் தலைவரா?'

'அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கேன். எதற்கும் உள்ளே ஒரு வார்த்தை கேட்டுடு!'



'உன் முகம் ஏன் இப்படி கறுத்துப் போச்சு?'

'கடன் கொடுத்தவன் வறுத்து எடுத்துட்டுப் போயிட்டான்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'இந்த வீட்டுல நான் இருக்கணுமா... உங்க அம்மா இருக்கணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!'

'நீங்க ரெண்டுபேரும் இங்கே இருங்க... நான் எங்காவது கிளம்பிடறேன்!'



'படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்!'

'மனைவிக்குத் தெரியாமல் யாருக்காவது கடன்கொடுத்திருக்கீங்களா..?'



'பொண்டாட்டி உடம்புல குந்து மணி நகைகூட இல்லாம வச்சிருக்கீயே, உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம்?'

'நல்லாக் கேளுங்கண்ணே. கொஞ்சம் இருங்க, காபி தர்றேன்... குடிச்சிட்டுப் போங்கண்ணே!'



'விருந்தாளிங்க அநேகமா இன்னைக்கே கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க..!'

'எதைவச்சுச் சொல்றீங்க?'

'எவ்வளவு நாள் தங்கற மாதிரி பிளான்னு கேட்டேன். அது, உங்க உபசரிப்பைப் பொறுத்ததுன்னு சொன்னாங்க!'



'தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு நீங்க கொடுத்த மருந்து பயங்கரமா வேலை செய்யுது, டாக்டர்!'

'எப்படி?'

'அந்த மருந்தை சாப்பிட்டதுலேர்ந்து நான் துக்கத்துல ரிவர்ஸ்ல நடக்கிறேன், டாக்டர்!'



'உங்க வீட்டுக்கு சமீபத்துல திருடனா வந்தான்?'

'ஆமா... ஏன் கேக்கற?'

'வீடு சுத்தமா துடைச்சு வச்ச மாதிரி இருக்கே!'



'எதிரி நம்மை மிகவும் கேவலமாகப் பேசுகிறானாம், மன்னா!'

'கேவலமோ, கீவலமோ ... நம்மைப் பற்றி அவன் பேசுவதே நமக்கு பெருமைதானே?'



'எதிரி மன்னனிடமிருந்து ' கிஸ்தியா? குஸ்தியா?' என்று கேட்டு ஓலை வந்திருக்கிறது, மன்னா!'

'குஸ்தி என்றால் அஸ்தி தான் அமைச்சரே! ஆகையால், கிஸ்தியை அனுப்பிவிடலாம்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.