தினமணி கொண்டாட்டம்

சூர்யா நெகிழ்ச்சி

DIN

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் "உடன்பிறப்பே'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 50-ஆவது படமாகும். அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இணையம் வழியே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா மற்றும் அவருடைய 50-ஆவது படம் குறித்து சூர்யா பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியிருப்பது.. ""1998-ஆம் ஆண்டின் கடைசியில் பிலிம் சிட்டியில் ஜோவை இயக்குநர் வஸந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பாறைக்குப் பக்கத்தில் இருவரும் பார்த்துக் கொள்வது மாதிரி, பின்பு இருவரும் கையைப் பிடித்து நடந்துபோவது மாதிரி படமாக்கினார்கள். அப்போதிலிருந்து இப்போது வரை ஜோவை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வேறு ஒரு ஊரிலிருந்து வந்த பெண், வேறு ஒரு மொழியை கற்றுக்கொண்டு அந்த ஊரையும் மக்களையும் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டுள்ளார். 50 படங்கள் நடித்துள்ளார். அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே ஏன் எடுக்கிறோம், எதற்காக எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். ஏன் சில படங்கள் செய்தேன், ஏன் சில படங்கள் செய்யவில்லை என்பதிலும் தெளிவாக இருப்பார். எப்போதுமே எது சரியோ அந்தப் பக்கம் இருப்பார். அவருடைய படங்கள், உறவுகள், வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் என அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்''  என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT