சல்மான்கானுடன் சமாதானமான பிரியங்கா!
சல்மான் கானின் சொந்த தயாரிப்பான "பாரத்' படத்தில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்ட பிரியங்கா சோப்ரா.
சல்மான் கானின் சொந்த தயாரிப்பான "பாரத்' படத்தில் நடிக்க முதலில் ஒப்புக் கொண்ட பிரியங்கா சோப்ரா. கடைசி நிமிடத்தில் விலகிவிட்டார். இதன் காரணமாக ஜோத்பூரில் நடந்த பிரியங்கா- நிக்ஜோன்ஸ் திருமணத்திற்கு பிரியங்கா அழைப்பு விடுத்தும் சல்மான் செல்லவில்லை. இருப்பினும் மும்பையில் நடந்த தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காவது சல்மான் வரவேண்டும் என்று கருதிய பிரியங்கா, சல்மானின் தங்கையும் தனது நெருங்கிய தோழியுமான அர்பிதா மூலம் விடுத்த சமாதான தூதை ஏற்ற சல்மான் திருமண வரவேற்பில் கலந்துகொண்டது பிரியங்காவை நெகிழ வைத்து விட்டதாம்.