தேங்காய்ப் பால் கொழுக்கட்டை
அரிசி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளுங்கள்.
தேவையானப் பொருள்கள்:
அரிசி மாவு- 1 கிண்ணம்
தேங்காய் - தேவையான அளவு
சர்க்கரை- 2 தேக்கரண்டி
வெல்லம்- அரை கிண்ணம்
தேங்காய்ப் பால்- அரை கிண்ணம்
நெய்- 3 தேக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
அரிசி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளுங்கள். பின்பு அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வையுங்கள். மீதமிருக்கும் மாவில் துருவிய தேங்காய், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். வாணலியில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள். அதை மற்றொரு வாணலியில் ஊற்றி மீண்டும் சூடுபடுத்துங்கள். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து, அடுப்பில் இருந்து இறக்கி வையுஹ்கள். இப்போது பால் கொழுக்கட்டை தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.