மகளிர்மணி

வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 100 மி.லி. ஊற்றி சூடானவுடன் மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவாலை ஆகியவற்றை போட்டு, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அ . ப . ஜெயபால்

தேவையான பொருள்கள்: 

தண்ணீர்- 100 மி.லி.
சீரகப் பொடி- அரை தேக்கரண்டி
துளசி இலை- ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை- 5 அல்லது 6 இதழ்கள்
தூதுவளை இலை- ஒரு கைப்பிடி அளவு
புளி கரைசல்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி- ஒரு துண்டு
தக்காளிப் பழம்-  1
சிகப்பு மிளகாய்- 1 
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 100 மி.லி. ஊற்றி சூடானவுடன் மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவாலை ஆகியவற்றை போட்டு, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்தவுடன் இறக்கி, ஒரு கப் மிளகுப் பொடி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும். இது காய்ச்சல், இருமல், சளிக்கு சிறந்த மருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT