தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- 8 கிண்ணம்
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
வெந்தயம்- 4 தேக்கரண்டி
கொள்ளு- 2 கிண்ணம்
செய்முறை:
கொள்ளு, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சுத்தம் செய்து, ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் கிரைண்டரில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துகொண்டு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்த மாவை எட்டு மணி நேரம் நன்றாகப் புளிக்கவிடவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லில் வைத்து, சூடானதும் தோசைகளாக வார்த்து இரண்டு புறமும் நன்றாக வேகும்படி, சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.