ஆர்.ஜெயலட்சுமி
வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.
பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
சிறிது கடலை மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு விட்டுக் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் எண்ணெய்ப் பசையைக் குறைக்கலாம்.
எண்ணெய் வழியும் முகத்தைச் சமாளிக்க வாரம் ஒரு முறை ஆரஞ்சுச் சாறு கலந்து முல்தானி மட்டியை முகத்தில் பூசிக் காய விட்டு கழுவ வேண்டும்.
ஆப்பிள் பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விட்டு முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.