அறியாமை போக்கு
கண்கள் இரண்டும் விளக்காக கல்வியைக் கற்றிட வேண்டாமா? கல்லா மனிதன் கல்லென்ற கருத்தை மாற்றிட வேண்டாமா? இன்னும் எதற்கோ அறியாமை இன்றே போக்கிட வேண்டாமா? இருப்போர்-இல்லார் எல்லாமே இனிதாய் படித்திட வேண்டாமா?
கண்கள் இரண்டும் விளக்காக
கல்வியைக் கற்றிட வேண்டாமா?
கல்லா மனிதன் கல்லென்ற
Advertisement
Advertisement
கருத்தை மாற்றிட வேண்டாமா?
இன்னும் எதற்கோ அறியாமை
இன்றே போக்கிட வேண்டாமா?
இருப்போர்-இல்லார் எல்லாமே
இனிதாய் படித்திட வேண்டாமா?
பொன்னும் பொருளும் இருந்தாலும்
எண்ணும் எழுத்தே கண்ணாகும்!
பொறுப்பாய் உணர்ந்து படிக்காவிட்டால்
பிறந்த வாழ்வே புண்ணாகும்!
பண்பும் அறிவும் படிப்பால் பெருகும்
பாமரம் இனிமேல் வேண்டாமே!
பள்ளிகள், கல்வியை அரசும் தருதே
படித்திடவே நீ தவறாதே!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.