மாலை மரியாதை!
காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.
காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.
""அதனால்தான் சொல்லவில்லை.., என்னை வரவேற்பற்கான் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருப்பாயே தவிர திருமண வேலைகளை கவனித்திருக்க மாட்டாய்''என்றார்.
அது மட்டுமல்ல, தனது காரிலிருந்த மாலைகளில் ஒன்றை எடுத்து வரச் செய்து தொண்டரிடம் கொடுத்து அணிவிக்கச் செய்து தொண்டரை மகிழ்வூட்டி மகிழ்ந்தார்!