வைராக்கியம்!
சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனை வெறிநாயொன்று கடித்துவிட்டது!
சாலையில் நடந்து சென்ற ஒரு சிறுவனை வெறிநாயொன்று கடித்துவிட்டது! சுற்றியிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொல்லனிடம் சிறுவனைத் தூக்கிச் சென்றனர். கொல்லன் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் கடிபட்ட இடத்தில் சூடு வைத்தான். சிறுவன் அலறித் துடிக்க இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு சிறுவனுக்கு இந்தக் கொடூர சம்பவம் ஆழ்மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது! சிறுவன் வளர்ந்து விஞ்ஞான பாடம் கற்றுப் பேராசிரியரானான்! தீவிரமாக ஆராய்ச்சி செய்து வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தான்! அந்த சிறுவன்தான் லூயி பாஸ்டர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.