• "கோபி, நீ சொல்லு...., மின் மோட்டார் எவ்வாறு வேலை செய்கிறது?''
"டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....''
"நிறுத்து!.....''
"டட்..... டடப்.... டப்..... .டஷ்....''
நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.
• "கையிலே எட்டுக்கால் பூச்சி கடிச்சிடிச்சிப்பா!''
"பூச்சி மேலே ஏறும்போதே தட்டி விட வேண்டியதுதானே....என்ன பண்ணிக்கிட்டிருந்தே?
"அதுக்கு எட்டுக்கால் இருக்கான்னு எண்ணிக்கிட்டு இருந்தேன்பா''
எஸ்.கே.சரவணன், மயிலாடுதுறை.
• "உனக்குத்தான் நல்லா பேச வருதே.....பேசாம பேச்சுப் போட்டியிலே சேர்ந்து பரிசு வாங்கலாமே''
"பேசாம எப்படி பேச்சுப் போட்டியில் பரிசு வாங்க முடியும்?''
நெ.இராமன், சென்னை - 74.
• "எதுக்குடா திரும்பி கோயிலுக்கு ஓடுறே?''
"சாமி கும்பிடும்போது என் பரிட்சை நம்பரை அவர் கிட்டே சொல்ல விட்டுப் போச்சு!....சொல்லிட்டு வந்திடறேன்''
பர்வதவர்த்தினி, 5, வீரராகவன் தெரு, அண்ணாநகர், பம்மல்,
சென்னை - 600075.
• "முக்கனிகள் என்னென்ன சொல்லு பார்க்கலாம்!''
"மூணு வாழைப்பழங்கள் சார்!''
தீ.அசோகன், திருவொற்றியூர்.
• "நேத்து பாகவதர் சபாபதியோட பாட்டுக் கச்சேரி!''
"எப்பிடி இருந்தது?''
"சபா பாதி காலியாயிட்டது!''
டி.என்.ரங்கநாதன்,
சி.கே.வி.ஐ. அபார்ட்மென்ட்ஸ், பிளாக் 25/4, திருவானைக்கோவில், திருச்சி - 620005.