கொடுத்ததை மறந்துவிட்டுப் பெற்றதை ஞாபகம் வைத்துக் கொண்டால் நட்பு மலரும்!
- டூமாஸ்
அறிவு இறைவனைத் தேடுகிறது! அன்பு இறைவனின் மடியில் அமர்ந்து கொள்கிறது!
- முகமது இக்பால்
அறிவில்லாத நேர்மை கொஞ்சம் பலவீனமானதாக இருத்தல் கூடும்!.... ஆனால் நேர்மை இல்லாத அறிவு ஆபத்தானதல்லவா?
- சாமுவேல் ஜான்சன்
நாம் செய்வதற்கு ஏதாவது வேலை எப்பொதும் இருந்து கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் தானே நடக்கும்!
- மில்டன்
பக்கத்து வீட்டுக்காரன் உறவினனைவிட நெருங்கியவன் என்பதை உணர்ந்து கொள்வாய்!
- யாரோ
கடமையை மறக்காமலிருந்தால் உரிமைகள் தானே நினைவில் இருக்கும்!
- இந்திரா காந்தி
நேரத்தைச் சேமித்தால் செல்வமெல்லாம் தானே சேரும்!
- டிஸ்ரேலி
பூங்காவில் மலர்ச்சி! முகங்களில் புன்னகை!
- யாரோ
அன்பினால் கோபம் வெல்லப்படுகிறது! நன்மைகளால் தீமை வெல்லப்படுகிறது!
- புத்தர்
ஒவ்வொரு குடிமகனும் சிந்,திக்கும் திறன் உடையவனாகவும், கல்வியறிவு உடையவனாகவும் திகழ வேண்டும். அதுவே ஜனநாயகம்!
- டாக்டர் அம்பேத்கார்