சிறுவர்மணி

கடி

DIN

• "இந்த ரோடு எங்கே போகுதுங்க?''
"அது எங்கேயும் போகாதுங்க.... அப்படியே இங்கேயேதான் இருக்கும்!''
மு.பெரியமசாமி, 
விட்டுக்கட்டி

• "நானும் எங்க மாமா மாதிரி வயலின் 
வித்துவானா ஆகணும்னு ஆசைப்படறேன்!''
"உங்க மாமா நல்லா வயலின் வாசிப்பாரா?''
"ம்ஹூம்.....அதெல்லாம் இல்லே,.... அவரும் ஆசைப்பட்டாரு!''
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

• "எதுக்கு காகிதத்தைக் கசக்கிட்டு, கட்டுரை எழுதறே?''
"கட்டுரையைச் சுருக்கமா எழுதிட்டு வரச்சொன்னாரு, எங்க வாத்தியார்!''
ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

• "ஒருத்தரு நாய் வளர்த்தாரு, அந்த நாய்க்கு பூ வாங்கிட்டுப் போனாரு! ஏன் சொல்லு!''
"நீயே சொல்லு!''
"அது சடை நாயாச்சே!''
ஆர்.சுப்பு, 
20, நா.பழனிச்சாமி வீதி, 
திருத்தங்கல். - 626130

• "இந்தச் சட்டை 10 வருஷம் உழைக்கும்னு சொன்னீங்க,..... ஆனா, ஆறு மாசத்திலேயே கிழிஞ்சிடுச்சே!''
"அட, அது கரெக்டுதான் சார்!..... அந்தச் சட்டை நம்ம கடை ஷோ கேஸ்லயே ஒன்பதரை வருஷம் இருத்திச்சு!''
எம்.ஏ.நிவேதிதா, 
3/14 ஏ, அரவக்குறிச்சிப்பட்டி,
அசூர் - 620015.

• "டக்குனு பதில் சொல்லு,.....நிலத்திலும், நீரிலும் வாழும் பறவை இனம் எது?''
"....."டக்' சார்!''
"வெரிகுட்!.... சரியான பதில்!''
பத்மா சாரதி, தஞ்சாவூர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT