சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN


மனிதன் தன் வயிற்றைப் பிராணிகளின் பிரேதக் குழியாக்குவது நல்லதன்று.  
- அக்பர்

அறிவு வளர, வளர உணர்ச்சிகள் பண்பட்டு நுட்பம் அடைகின்றன.  
-  மு . வரதராசனார்

அன்பின் மூலமாகவே ஆனந்தத்தைப் பெருக்க முடியும்.  
-  சத்ய சாயி

பூக்கள் வண்ணங்களோடு மணம் பரப்பவும், பறவைகள் சுதந்திரத்தோடு சங்கீதம் பாடவும், மனிதன், உயிர்களை நேசித்து அன்பு செலுத்தவும் படைக்கப்பட்டுள்ளான். இவைகளால் உலகில் பிரகாசமும், மணமும், சாந்தியும் ஏற்படுகின்றன. 
- ஜீன்மாரி வியன்னே

ஆன்மாவின் வலிமையை சோதித்துப் பார்க்கவே பிறவிகள் ஏற்படுகின்றன. 
- பிரெளனிங்

உறுதியான நம்பிக்கைக்கு இறைவன் துணையிருப்பார். இயற்கையின் எல்லா சக்திகளும் நமக்குத் துணையாயிருக்கும்!  
- ஜேம்ல் ஆலென்

இறைவன் பஞ்சைக்  கொடுப்பார். நாம்தான் அதைத் துணியாக நெய்ய வேண்டும்.  
-  எபிகுரூஸ்

செய்த தவற்றை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு ஒப்பாகும்.
-  தாமஸ் புல்லர்

செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வந்தன். வரவுக்கு மேல் செலவு செய்பவன் ஏழை. அவ்வளவுதான். 
- புருவெர்

அறியாமையிலிருந்து அச்சமும் தோன்றுகிறது. 
- எமர்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

SCROLL FOR NEXT