சிறுவர்மணி

வண்ணக்கொடி உயர்த்துவோம்!

ஜி. ஜெயராமன்


கொடி உயர்த்துவோம்...
கொடி உயர்த்துவோம்...
பாடியாடிக் கூடிநமது
பாரதத்தின் மூவர்ணக்
கொடி உயர்த்துவோம்!     (கொடி)

தூய்மையான வெண்மையோடு
வாய்மையென்ற கொள்கையேந்திச்
செழுமையென்ற பசுமைதாங்கிச்
சூழும்வீரச் சிவப்பினோடும்
சாரநாத்தின் சக்கரம்போல்
சுற்றிப் பறக்கும் மூவர்ணக்      (கொடி)

எல்லையெங்கும் தொல்லையென்ற
அல்லலின்றிப் பாரதத்தின்
அண்டைநாட்டு மக்களோடு
அன்புகொண்டு பழகிநாட்டின்
பட்டிதொட்டி எங்கும்ஒன்று
கூடி நின்று மூவர்ணக்         (கொடி)

அண்ணல் காந்தி தந்ததூய
அன்புயென்ற வழிநடந்து
சத்தியத்தைக் காத்துநின்று
நித்தம் சாந்தித் தீபம்ஏற்றிப்
பார்முழுதும் பாரதத்தின்
தீரப்பண்பு காட்டும்வண்ணக்       (கொடி)

ஓதுகின்ற கல்வி, செல்வம்
பேதமின்றி யாவருக்கும்
ஒன்றுபோலத் தந்துநமது
ஒற்றுமையின் சின்னமிதை
ஒன்றுகூடி உயர்த்திப் பணிந்து
என்றும் வாழ்க வாழ்கவென்று....(கொடி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT