வில்லனாக நடித்தது ஏன்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. "மாஸ்டர்' படம் குறித்து வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது.....""எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க எல்லோருக்கும் வழி கிடைக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது. நான் கொடூரமான கேங்க்ஸ்டராக நடிக்கிறேன். ஆனால் அதை முழுக்க ரசித்து நடித்தேன்'' இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.