ஞாயிறு கொண்டாட்டம்

உயர்ந்த மனிதன்!

DIN

உலகத்தின்  உயரமான  மனிதன்  யார் என்பதை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. கனடா   நாட்டைச் சேர்ந்த ஆலிவர் ரியோஸ்ஸூக்கு   ஏழு அடி ஐந்தரை அங்குல  உயரம் இருக்கிறது. வயது பதினாறு.  கூடைப் பந்தாட்ட  வீரர்.   15  வயதிலேயே  ஆலிவர்  உலகின் மிக உயரமான மனிதர்  என்ற பெருமையைப் பெற்றார். 

கின்னஸ் சாதனை  ஆலிவரின் 16  வது வயதில்  உலகின் மிக உயரமான மனிதர் என்று அங்கீகரித்துள்ளது. ஆலிவர் பெற்றோர்களும்  உயரமானவர்கள். தந்தை ஜீன் ஃபிரான்கோய்ஸ்  ஆறு  அடி எட்டு அங்குலம். தாயான அன்னி  ஆறு அடி ஒரு அங்குல  உயரம் கொண்டவர்கள். சின்ன வயதில் மற்ற சிறுவர்கள் போல  சராசரி உயரத்தில்  இருந்த  ஆலிவர் வளர்ச்சி  கிடுகிடுவென்று   தொடங்கியது 13  ம்  வயதிலிருந்து தான்.  ஆலிவரை மருத்துவரிடம் காட்டியபோது  ஆலிவர் ஆறரை அடி  உயரத்தைத் தாண்டுவார் என்று சொன்னார்களாம். ஒவ்வொரு வருடமும்  பத்து  செ . மீ   உயர்ந்து  ஏழு அடி  ஐந்தரை  அங்குலத்தைத் தொட்டிருக்கிறார்.
பனுஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

நொய்டா: ஜேவா், ரபுபுராவில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கை நிலையங்கள் அமைப்பு

SCROLL FOR NEXT