வெள்ளிமணி

அபய ப்ரதானம் என்றால் என்ன?

DIN

* ஒருவன் மிகவும் பயந்து போயிருக்கிறான். அவன் மற்றொருவனிடன் பூரணமாகச் சரணடைந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். அவனை ஒருவன், " நீ பயப்படாதே, உன்னுடைய துன்பத்திலிருந்து நான் உன்னை விடுவிக்கிறேன்'' என்று கூறுகிறான். அவ்விதம் கூறுபவன் தன்னிடம் சரணடைந்தவனுக்கு "அபய ப்ரதானம்' செய்கிறான்.

* விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* அதுபோல் மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் சரணடைகிறான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு,  "அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* தமது கோயில்களில் தேவ - தேவியர்களுக்கு "அபய கரம், வரம் தரும் கரம்'  ஆகியவை இருக்கின்றன. இவற்றில் " அபய கரம்' தன்னை வழிபடும் பக்தர்களுக்கு "அபய ப்ரதானம்'  வழங்குவதைக் குறிக்கும். 

* "பயம்' என்றால் "அச்சம்', அச்சமற்ற நிலையை, தன்னிடம் சரணடைந்தவனுக்கு ஒருவன் வழங்குவது  "அபய ப்ரதானம்' எனப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT