வெள்ளிமணி

நிகழ்வுகள்

தினமணி

மஹா குருபூஜை
 திருபுவனம் அருள்மிகு விராலிமலை ஸ்ரீ சதாசிவ சுவாமிகள் மடாலயத்தில் சுவாமிகளின் 9 -ஆம் ஆண்டு மஹா குரு பூஜை விழா, டிசம்பர் 8-ஆம் தேதி, சனிக்கிழமை மூல நட்சத்திரம் கூடிய நாளில், அன்று காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கி பால்குடம், ஹோமங்கள், மகா அபிஷேகம், மகேஸ்வர பூஜை, தேவார இன்னிசை, பஜனை போன்ற நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 99441 78340 / 74187 43762.
 ஸ்ரீ வாஞ்சியம் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா
 திருவாரூர், நன்னிலம் வட்டம், திருவாஞ்சியம் திருத்தலத்தில் கார்த்திகை ஞாயிறு பெருவிழா, தல தீர்த்தமான குப்தகங்கையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் நடைபெற்று, கடை ஞாயிறு விழா, டிசம்பர் 9- ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. அன்று நீராடுபவர்களின் சகலபாவங்களும் பிதுர் தோஷமும் நிவர்த்தியாவதாக ஐதீகம். அன்று காலை 5.30 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் தீர்த்தம் கொடுத்தருளுதல் நிகழ்கிறது. முன்னதாக, டிசம்பர் 8 -ஆம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறும்.
 தொடர்புக்கு: 04336-292305.
 விரிஞ்சிபுரம் கார்த்திகை கடை ஞாயிறு விழா
 வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு விழா, டிசம்பர் 9- ஆம் தேதி பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியுடன் நடைபெறுகின்றது. இதனை ஒட்டி டிசம்பர் 8 -ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாலயத்தில் உள்ள சிம்மதீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு, தீவினைகள் யாவும் விலகி விடுவதாக ஐதீகம். பிள்ளைப்பேறு வேண்டுபவர்களுக்கும் இந்த தீர்த்த நீராடுதல் சிறந்த பரிகாரமாக அமைகின்றது.
 தொடர்புக்கு: 0416 - 2272277, 97871 56532.
 சம்பூர்ண நாராயணீயம் பாராயணம்
 சென்னை, விருகம்பாக்கம், நடேச நகர் ஸ்ரீசிவவிஷ்ணு ஆலயத்தில் டிசம்பர் 14- ஆம் தேதி நாராயணீயம் தினத்தை முன்னிட்டு அன்று காலை 8 மணி முதல் விமலா ஸ்ரீகுமார் குழுவினரால் சம்பூர்ண நாராயண பாராயணம் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 98400 94246.
 மகா அபிஷேக பெருவிழா
 ஈரோடு மாவட்டம், அந்தியூர், அருள்மிகு செல்லீஸ்வரி அம்மை உடனமர் அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயிலில், திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை 8 -ஆம் ஆண்டு துவக்க விழா, 8-ஆம் ஆண்டு திருமுறை பண்ணிசை முற்றோதுதல் மற்றும் கார்த்திகை மாத மகா அபிஷேக விழா ஆகியவை, 8.12.2018 மற்றும் 9.12.2018 தேதிகளில் நடைபெறுகின்றது.
 தொடர்புக்கு: 99420 11314 / 99428 55343.
 மார்கழி திருவாதிரை மகோத்ஸவம்
 சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயில், அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத அருள்தரும் ஆனந்த நடராஜ ராஜமூர்த்தியின் சந்நிதியில் 12.12.2018 - 25.12.2018 வரை, தினமும் பஞ்சமூர்த்திகள் வீதிவுலாவுடன் வேதபாராயணம், தேவார பாராயணத்துடன் மார்கழி திருவாதிரை மகோத்ஸவ விழா நடைபெறுகின்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT