முகப்பு
வெள்ளிமணி

சு​வ​னம்

இவ்​வு​ல​கத்​தில் நாம் கண்​ணால் காணும் அனைத்து இன்​பங்​க​ளும் நிழ​லைப் போன்​றது; அது நீங்​கி​வி​டும்.

பகிர்:

இவ்​வு​ல​கத்​தில் நாம் கண்​ணால் காணும் அனைத்து இன்​பங்​க​ளும் நிழ​லைப் போன்​றது; அது நீங்​கி​வி​டும். ஆனால் மறு​மை​யில் சொர்க்​கத்​தில் மனி​தர்​கள் அடை​யப்​போ​கும் இன்​பங்​கள் நிஜம். அதில் ஒரு​நா​ளும் குறைவோ, சலிப்போ ஏற்​ப​டாது. மேலும் அவை என்​றென்​றும் நிலைத்த இன்​பங்​க​ளா​கும். 

மறு​மை​யி​னுள் நுழை​யும் முதல் அணி​யி​னர் பெüர்​ணமி இர​வில் ஒளி​ரும் நில​வைப் போன்று அழ​கா​கத் தோற்​ற​ம​ளிப்​பார்​கள். பிறகு அவர்​க​ளுக்கு அடுத்து நுழை​ப​வர்​கள் விண்​ணில் நன்​றா​கப் பிர​கா​சிக்​கும் நட்சத்​தி​ரம் போன்று காட்சி​ய​ளிப்​பார்​கள். சொர்க்​கத்​தில் அவர்​கள் மலம் ஜலம் கழிக்க மாட்டார்​கள். மூக்​குச் சிந்த மாட்டார்​கள். எச்​சில் துப்ப மாட்டார்​கள்.
அவர்​க​ளின் சீப்​பு​கள் தங்​கத்​தா​லா​னவை. சொர்க்​க​வா​சி​க​ளின் வியர்​வை​யில் கஸ்​தூரி மணம் கம​ழும். அவர்​க​ளு​டைய துணை​வி​யர் கண்​ண​ழ​குக் கன்​னி​யர் (ஹீருல் ஈன்) ஆவர். அவர்​கள் அனை​வ​ரின் குண​மும் ஒரே வித​மா​கவே அமைந்​தி​ருக்​கும். அவர்​கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்​க​ளின் தோற்​றத்​தில் வானத்​தில் அறு​பது முழம் உய​ரம் கொண்​ட​வர்​க​ளாக இருப்​பார்​கள்.
சொர்க்​கத்​தில் நற்​செ​யலோ, தீய செயலோ இல்லை. ஒரு​வ​ரை​யொ​ரு​வர் குரோ​தம் கொள்​ள​மாட்​டார்​கள். சொர்க்​க​வா​சிக்கு மர​ணம் என்​பது இல்லை. இவ்​வு​ல​கில் எல்லா இன்​பங்​க​ளி​லும் அசிங்​க​மும், அரு​வ​ருப்​பும் கலந்​தி​ருக்​கி​றது. ஆனால் சுவ​னத்​தில் இவை எது​வும் இல்​லாத தூய்​மை​யு​டை​ய​தா​க​வும் மேலும் இன்​பத்தை அதி​க​ரிக்​கக் கூடி​ய​தா​க​வும் இருக்​கும். அங்கே எவ​ரும் எதற்​கும் நிர்ப்​பந்​திக்​கப்​பட மாட்டார்​கள்.
நபி (ஸல்) அவர்​கள் கூறி​யுள்​ளார்​கள்: ""சொர்க்​கத்​தில் மக்​கள் ஒன்று கூடும் சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்​வொரு வெள்​ளிக்​கி​ழ​மை​யும் சொர்க்​க​வா​சி​கள் வரு​வார்​கள். அப்​போது வட பரு​வக் காற்று அவர்​க​ளு​டைய முகங்​க​ளி​லும், ஆடை​க​ளி​லும் கஸ்​தூரி மணலை வாரி வீசும்.  உடனே அவர்​கள் மென்​மே​லும் பொலிவு பெறு​வார்​கள். பிறகு அழ​கும், பொலி​வும் அதி​க​மா​கப் பெற்ற நிலை​யில் அவர்​கள் தங்​கள் துணை​வி​ய​ரி​டம் திரும்​பிச் செல்​வார்​கள்.
அப்​போது அவர்​க​ளு​டைய துணை​வி​யர் "எங்​க​ளி​ட​மி​ருந்து சென்ற பின்​னர் கூடு​த​லான அழ​கை​யும், பொலி​வை​யும் பெற்று விட்டீர்​களே!' என்று கூறு​வர். அதற்கு அவர்​கள் "அல்​லா​ஹுத ஆலா​வின் மீதா​ணை​யாக நாங்​கள் சென்ற பிறகு நீங்​க​ளும்​தான் கூடு​த​லான அழ​கும், பொலி​வும் பெற்​றி​ருக்​கி​றீர்​கள்!' என்று கூறு​வர்.
இன்​னும் சொர்க்​க​வா​சி​கள் தமக்கு மேலே​யுள்ள சிறப்பு அறை​க​ளில் வசிப்​ப​வர்​களை அடி​வா​னில் கிழக்​கி​லி​ருந்தோ மேற்​கி​லி​ருந்தோ பய​ணிக்​கிற ஒளி​ரும் நட்சத்​தி​ரத்​தைப் பார்ப்​ப​தைப் போன்று ஆர்​வத்​து​டன் பார்ப்​பார்​கள். தகு​தி​யில் தமக்​கும் அவர்​க​ளுக்​கும் இடையே உள்ள ஏற்​றத் தாழ்​வைக் கண்டு ஏக்​கத்​து​டன் அப்​படி பார்ப்​பார்​கள்'' என்று நபி (ஸல்) அவர்​கள் கூறி​ய​போது, நபி தோழர்​கள் ""அல்​லாஹ்​வின் தூதர் அவர்​களே... அவை நபி​மார்​கள் தங்​கு​மி​டங்​கள்​தானே? மற்​ற​வர்​கள் அவ்​வி​டத்தை அடைய முடி​யா​து​தானே?'' என்று
 கேட்ட​னர்.
அல்​லாஹ்​வின் தூதர் (ஸல்) அவர்​கள் ""இல்லை... என் உயிர் எவன் வசம் உள்​ளதோ அவன் மீது ஆணை​யாக அங்கே தங்​கு​ப​வர்​கள் அல்​லாஹ்​வின் மீது உறுதி ஏற்​றுக்​கொண்ட மக்​களே ஆவர்'' எனப் பதி​ல​ளித்​தார்​கள்.
உண்​மை​யில் நாம் ஆசைப்​பட தகு​தி​யு​டைய விஷ​யங்​கள் இவை​தான். எந்த சுகங்​கள் நிலைத்​தி​ருக்​குமோ அந்த சுகங்​க​ளின் பக்​கமே அல்​லாஹ் தீனுல் இஸ்​லாத்​தின் மூலம் மக்​களை அழைக்​கி​றான். இந்த உயர்ந்த இன்​பங்​களை அடைய ஈமா​னும், பொறு​மை​யுமே தகு​தி​யா​கும். இவ்​வு​ல​கில் நம்​மைச் சூழ்ந்​துள்ள பல சிற்​றின்​பங்​களை விட்டு ஒதுங்கி, பொறு​மை​யோடு வாழ்ந்து விட்டால் மறு​மை​யில் என்​றென்​றும் நிலைத்​தி​ருக்​கக் கூடிய சுவ​னத்தை அடை​ய​லாம்.
அழிந்து போகும் இவ்​வு​ல​கையே அல்​லா​ஹுத ஆலா இத்​தனை அழ​கு​ட​னும், வச​தி​க​ளு​ட​னும் படைத்​தி​ருக்​கி​றான் என்​றால், மறு​மை​யில் அழி​வில்​லாத அந்த சொர்க்​கத்தை எந்த அளவு உயர்​வா​க​வும், தூய்​மை​யா​க​வும் படைத்து வைத்​தி​ருப்​பான். சொர்க்​கத்​தின் உண்​மை​யான இன்​பங்​களை எந்த வார்த்​தை​யும் விளக்​கிச் சொல்​லி​விட முடி​யாது.
எந்​தக் கண்​ணும் கண்​டி​ராத, எந்​தக் காதும் கேட்டி​ராத, எவ​ரின் கற்​ப​னை​யி​லும் தோன்​றி​யி​ராத வகை​யில் அல்​லாஹ் சொர்க்​கத்​தைப் படைத்​தி​ருக்​கி​றான் என நபி (ஸல்) அவர்​கள் கூறி​யுள்​ளார்​கள். 
அல்​லாஹ்​வின் அரு​ளின் மீதுள்ள நம்​பிக்​கை​யைக் கொண்டு இவ்​வு​ல​கின் சிர​மங்​க​ளைச் சகித்து, ஆசை​களை விட்டு அகன்று, நபி (ஸல்) அவர்​கள் கூறி​யுள்​ள​படி நம் குணா​தி​ச​யங்​களை அமைத்​துக் கொள்​வோ​மே​யா​னால் இன்ஷா அல்​லாஹ் சொர்க்​கம் செல்​ல​லாம். 
-ஹாஜி மு.மு​கம்​மது அன்​வர்​தீன்
 

முழு கட்டுரையைப் படிக்க →