முகப்பு
உலகம்

"மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரிக்க வேண்டும்'

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை

Updated On : 2 மார்ச் 2013, 12:46 am IST
பகிர்:

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அந்நாட்டு அரசு பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தேதி வரை போர் குற்றங்கள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ளவில்லை.

இது குறித்து, பாரபட்சமற்ற விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரெல் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இலங்கையில், போர் நடந்தபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.