முகப்பு
உலகம்

2 ஹெலிகாப்டர்கள் மோதல்: ஒருவர் சாவு

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர்

Updated On : 22 மார்ச் 2013, 1:09 am IST
பகிர்:

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கால்பந்து போட்டிகளுக்கு எதிரானவர்களின் தாக்குதலை முறியடிப்பதற்கான பயிற்சியில்  போலீஸôர் ஈடுபட்டிருந்தபோது, ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தின் வான் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பைலட் என்றும், இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில்தான் கடந்த 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.