முகப்பு
உலகம்

17-ல் தாட்சர் இறுதிச் சடங்கு

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2013, 10:41 pm IST
பகிர்:

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆர்ஜெண்டினா அதிபருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்கரெட் தாட்சர் கடந்த திங்கள்கிழமை காலமானார். லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 17) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் டேவிட் கேமரூன் அலுவலகத்துடன் இணைந்து மார்கரெட் தாட்சர் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தின் பிரதிநிதி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோஸ் மேனுவல் பாரோசோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரிட்டன் ராணியும், இளவரசரும் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.