முகப்பு
உலகம்

என்னை கொல்ல சதி

தேர்தல் பிரசாரத்தின்போது என்னை கொலை செய்ய சதி நடப்பதாக அரசு எனக்கு எச்சரிக்கை விடுத்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

Updated On : 12 ஜூன், 2013 at 12:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

தேர்தல் பிரசாரத்தின்போது என்னை கொலை செய்ய சதி நடப்பதாக அரசு எனக்கு எச்சரிக்கை விடுத்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:÷""கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பேரணியொன்றில் என்னை கொல்லச் சதி நடைபெறுவதாக அரசு தரப்பு என்னை எச்சரித்தது'' என்றார். எனினும், அந்தச் சதியின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக கட்சியின் பேரணியொன்றில் மேடைக்குச் செல்லும் வழியில் தவறி விழுந்த இம்ரான் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லாகூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் முழுமையாக குணமடையவில்லை. அதனால் எம்.பி.யாக அவர் இன்னமும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

போராட்டம்:÷இம்ரான் மேலும் கூறுகையில், ""நாடாளுமன்றத் தேர்தலின்போது நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தன. தேர்தலில் முறைகேடு தொடர்பான எனது கட்சியினரின் புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.