முகப்பு
உலகம்

ஈரானுக்குள் நுழைய முயன்ற 10 ஆப்கானியர் சுட்டுக் கொலை

ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

Updated On : 13 மே 2013, 12:23 am IST
பகிர்:

ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராட் மாகாணத்தில் இருந்து ஈரான் எல்லைக்குள் 200-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர் வெள்ளிக்கிழமை இரவு நுழைய முயன்றனர்.

அப்போது ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் வேலைவாய்ப்பைத் தேடி ஆண்டுதோறும் ஏராளமான ஆப்கானியர்கள் சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.