வடக்கு சீனாவில் வீசி வரும் கடும் பனிப்புயலால் பிஜீங் நகரமே ஸம்தம்பித்துள்ளது. நகரின் விமான, ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பனியால் பிஜீங் நகர் வழியாக செல்லும் ஆறு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. மேலும், புல்லட் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. பிஜீங்- ஷாங்காய் உள்ளிட்ட சில ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
சாலை முழுவதும் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணியில் 23,000 தொழிலாளர்களும், 2,300 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.