உலகம்

பாகிஸ்தான் ஆளுநரைக் கொன்ற முன்னாள் காவலருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

IANS

பாகிஸ்தான் வசம் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீரை கொலை செய்த வழக்கில் அந்நாட்டு முன்னாள் காவலர் மும்தாஸ் கட்ரிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இஸ்லாமாபாத்தின் கோஹ்சார் சந்தையில் ஆளுநர் தசீரை 28 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார் கட்ரி.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம், கட்ரிக்கு மரண தண்டனை விதித்தது.

இறை சக்தியை நிந்திப்பதை தடுக்கும் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிராக தஸீர் கருத்துக் கூறியிருந்ததால் அவரைக் கொன்றதாக வழக்குப் போடப்பட்டது.

இந்த நிலையில், இன்று கட்ரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறைச்சாலை உள்ள பகுதியில் கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT