உலகம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை !

DIN

சீனவில் ஜீஜியாங் மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை.

இது பற்றிய விபரம் வருமாறு:

சீனாவில் மேகி புயலின் காரணமாக கடுமையான மழை பொழிந்து வருகிறது. இதனால் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள சுகுன் கிராமத்தில் நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்திலிருந்தவர்களில் 27 பேரைக் காணவில்லை என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல் பயோபிங் என்ற கிராமத்திலும் 6 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீனாவில் ஜீஜியாங் மாகாணத்தில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக 20 வீடுகள்  மண்ணில்  புதைந்துள்ளன மேலும் 17 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT