அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் திடீரென சிலர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டதும் பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பள்ளியை விட்டு வெளியேறினர். மேலும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் அங்குவிரைந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேற்கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என தெரிய வந்துள்ளது. மேலும் அந்த நபரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டு அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ட்ரம்ப் இரங்கல்:
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.