உலகம்

ஈரான் விமான விபத்தில் 66 பேர் சாவு

ஈரான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

Raghavendran

ஈரானைச் சேர்ந்த ஏடிஆர் 72 ரக ஏசிமான் ஏர்லைன்ஸைச் சேர்ந்த பயணிகள் விமானம் தெஹரானில் இருந்து தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யசூஜ் என்ற இடத்துக்கு பயணித்தது.

அதில், விமான ஓட்டி, துணை விமானி, விமான பணியாளர் இருவர், பாதுகாவலர்கள் இருவர் மற்றும் 60 பயணிகளுடன் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது. 

அப்போது, டீனா மலைப்பகுதியின் அருகில் சென்றபோது அங்கு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி அதில் பயணித்த 66 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக உதவிக் குழுவினர் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று ஈரான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் மோஜ்தாபா கலேடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT