இரட்டைப் பேரிடருக்கு உள்ளான இந்தோனேசியாவில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கி இனி யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், மீட்புப் படையினர் தங்களது மீட்புப் பணியை நிறைவு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில், இரட்டைப் பேரிடர் தாக்கிய இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1,558 பேர் பலியானதாகவும், 2,549 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கி பலியான 618 பேரின் உடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் 921 பேரது உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இடிபாடுகளுக்குள் இன்னமும் 152 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று மீட்புக் குழுவினர் கருதுகிறார்கள்.
பலாரோவில் உள்ள அரசுக் குடியிருப்புப் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூமியில் புதைபட்டிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி தத்தளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.